துறைமுக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம்: மஹிந்த முள்ளிநியூஸ்

துறைமுக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம்: மஹிந்த



ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இன்று 2 மணிக்குள் வேலைக்குத் திரும்பாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவ்வாறு செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அங்கு பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ச, இது தொடர்பில் பிரதமருடன் கலந்தோலோசிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளதாகவும் பணி நீக்கம் செய்வது அநீதியானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW