அதிகாரப் பகிர்வை மூடி மறைக்கப் போவதில்லை: மஹிந்த அமரவீர

கடும்போக்குவாதிகள் பிரச்சாரம் செய்வது போன்று மூடி மறைத்து அதிகாரப் பகிர்வு இடம்பெறப் போவதில்லையென தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு செயலாளர் மஹிந்த அமரவீர.
உத்தேச அதிகாரப் பகிர்வின் மூலம் நாட்டில் பௌத்த மதம் அழியவோ, நாடு பிரியவோ போவதில்லையென தெரிவித்துள்ள அவர், மக்கள் அபிப்பிராயத்துடனேயே அனைத்தும் இடம்பெறும் என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.