பெர்லின் லொறி தாக்குதலுக்கும் ISIS உரிமை கோரல்
நேற்று முன்தினம் இரவு ஜேர்மனி, பெர்லின் நகரில் கிறிஸ்மஸ் சந்தையொன்றுக்குள் கனரக லொறியால் மோதி 12 பேர் கொலையான சம்பவத்துக்கு உரிமை கோரியுள்ளது ஐ.எஸ். அமைப்பு.
முன்னராக பாகிஸ்தானிய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டு, தகுந்த காரணங்கள் இல்லையெனும் காரணத்தினால் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர்.
இதே போன்ற தாக்குதல் ஒன்று பிரான்சிலும் இவ்வருடம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.