திருகோணமலை மாவட்ட விஷேட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 18ம் திகதி
திருகோணமலை மாவட்ட விஷேட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி பிற்பகல் 2.00மணிக்கு மாவட்ட செயலகத்தில் இணைத்தலைவர்களான இரா.சம்பந்தன் ஹாபிஸ் நசீர்,சுசந்த புஞ்சிநிலமே,அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விஷேட கூட்டத்தில் 2020ம்ஆண்டு வரை ஜனாதிபதியால் முன்வைக்கப்ட்டுள்ள வறுமை ஒழிப்பு தொடர்பாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி தொடருமானால் எப்படி முகங்கொடுப்பது பற்றியும் விஷேடமாக கலந்துரையாடப்படவுள்ளதாக மாவட்ட செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.