43 பொலிசார் ASPயாக பதவியுயர்வு

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பரிந்துரைக்கமைய 43 பொலிசார் ஏ.எஸ்.பியாக பதவியுயர்வு பெற்றுள்ளனர்.
பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சேவைக்காலம், அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் இப்பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு, புலனாய்வுப் பிரிவு உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இத்தெரிவுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.