கட்டுகஸ்தோட்டையில் ஹெரோயின் போதைப் பொருள் சப்ளையர்கள் மூவர் கைது.
குருநாகல் பிரதேசத்திலிருந்து கண்டி பிரதேசத்தில் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்வதற்காக இவை எடுத்து வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மஹய்யாவ,தென்னேகும்புர மற்றும் கட்டுகஸ்தோட்டை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகும்.
கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர்களை கண்டி நீதவான் முன் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.