உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத்திகதி அறிவிப்பு முள்ளிநியூஸ்

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத்திகதி அறிவிப்பு


இந்த ஆண்டு இடம்பெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை நடந்து முடிந்த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் நாளை தொடக்கம் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேட்டினை நாளை முதல் இணையத்தளம் மற்றும் புத்தக விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW