SAITM நிறைவேற்று அதிகாரியின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு!
மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரி கலாநிதி சமீர சேனரத்னவை இலக்கு வைத்து நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனினும், சம்பவத்தில் அவர் காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள முல்லேரியா பொலிசார் விசாரணைகளைத் தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.