நுவரெலியாவில் பாரிய கல் புரண்டு விழுந்ததில் தந்தையும் மகனும் பலி

நுவரெலியா தெரிபேஹெ தப்பேரேயில் செங்குத்தான பகுதியை விவசாயத்தை மேற்கொள்வதற்காக சீரமைத்து கொண்டிருந்த போது கல் ஒன்று புரண்டதில் தந்தை மற்றும் மகனும் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிப்பு.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதோடு அதில் 70 வயதான தந்தையும், 36 வயதான மகனும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.