பாகிஸ்தான்: எண்ணை தாங்கி வெடித்ததில் 100 பேர் பலி!
பாகிஸ்தான், பஹவல்பூர் பகுதியில் வேகமாகப் பயணித்த எண்ணைத் தாங்கியுடனான வாகனம் விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தோர் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை தீயணைப்புப் படையினர் கடும் பிரயத்தனம் மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.