நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை முள்ளிநியூஸ்

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


நாட்டு மக்களுக்கு எச்சரிக்கையொன்றை சுகாதார திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி நாட்டில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார். 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்றைய தினம் (14.06.2023) ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், இயற்கையான முறையில் சருமத்தைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது. 

சில பெண்கள் சரியான விளக்கமின்றி சருமத்தை வெண்மையாக்கும் முகப் பூச்சுகளை (கிரீம்) பயன்படுத்துவது கூட புற்றுநோயின் தாக்கத்துக்கு காரணமாக அமையலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW