மீன்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு முள்ளிநியூஸ்

மீன்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மீன்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு


மீன்களின் விலையை குறைக்க முடியாது என கடற்றொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த மாதத்தின் முதலாம் திகதி தொடக்கம், வீட்டுத் தேவைக்கான மண்ணெண்ணெயின் விலை 50 ரூபாவினாலும், தொழில்துறைக்கான மண்ணெண்ணெயின் விலை 134 ரூபாவினாலும் குறைப்பட்டது. 

நுகர்வோர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு இந்நிலையில் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், மீன்களின் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை என கடற்றொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மண்ணெண்ணெய் விலைத்திருத்தத்துக்கு அமைய, மீன்களின் விலையை குறைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சந்தையில் மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், தாங்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW