காஸாவில் உயிரிழக்கும் அபாயத்தில் குறைமாதக் குழந்தைகள்

இது தொடர்பில் அல் ஷிfபா மருத்துவமனை வைத்தியர் நாசர் புல்புல் தெரிவிக்கையில்;
“இந்த நெருக்கடியான நிலைக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அனுப்பி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
இல்லையெனில் நாங்கள் மிகப்பெரிய அழிவை சந்திக்க வேண்டியிருக்கும். இங்கே 55 குழந்தைகள் உள்ளனர்.
ஒருவேளை மின்சாரம் இல்லாமல் போனால் மின்சார உதவி தேவைப்படும். குழந்தைகளை அடுத்த 5 நிமிடங்களில் இழந்து விடுவோம்”
மருத்துவமனைகளில் எரிபொருள் மிகவும் குறைவாக, அபாய கட்டத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
இந்த மருத்துவமனையில் மட்டும் சுமார் 60,000 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW