எகிப்தில் குண்டுவெடிப்பு: 20 பேருக்கு மேல் பலி!
எகிப்து, கைரோவில் கொப்டிக் கிறிஸ்தவ தேவாலயம் அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பொன்றில் இதுவரை வெளியான தகவல்கள் அடிப்படையில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எகிப்தின் மக்கள் தொகையில் 10 வீதமாக கொப்டிக் பழங்குடி கிறிஸ்தவர்கள் மத்திய கிழக்கெங்கும் சிறுபான்மையாக பரவி வாழ்கின்றனர். இப்பழங்குடி மக்களின் தேவாலயம் அருகிலேயே குண்டு வெடித்துள்ளதுடன் விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.